கோவையில் வரும் 10ம் தேதி வைப்புநிதி அலுவலகம் சார்பில் குறைதீர்ப்பு கூட்டம்..!

கோவை: கோவையில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், வரும் 10ம் தேதி 'நிதி ஆப்கே நிகட்' என்கிற பெயரில் பிப்ரவரி மாத குறைதீர் கூட்டம் நடக்கிறது.


கோவை: கோவையில் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், வரும் 10ம் தேதி 'நிதி ஆப்கே நிகட்' என்கிற பெயரில் பிப்ரவரி மாத குறைதீர் கூட்டம் நடக்கிறது.

கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள, மண்டல ஈ.பி.எப்., அலுவலகம், இணையவழியில் இம்முகாமை நடத்த உள்ளது. இக்கூட்டம், மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் தலைமையில் நடக்கிறது. பி.எப்., சந்தாதாரர்களுக்கு, காலை, 11:00 முதல், 12:00 மணி வரையிலும், தொழில்நிறுவன உரிமையாளர்களுக்கு, மதியம், 12:00 முதல், 1:00 மணி வரையிலும் இணைய வழியில் குறைதீர்ப்பு நடக்கும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 8ம் தேதிக்குள் இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த தகவலை, கோவை மண்டல பி.எப்., கமிஷனர் ரவிக்குமார் வெளியிட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...