கோவை கல்வி மாவட்டத்திற்கு நிரந்தர மாவட்ட கல்வி அதிகாரிகள் பொறுப்பேற்பு.

கோவை கல்வி மாவட்டத்திற்கு நிரந்தர மாவட்ட கல்வி அதிகாரிகள் பொறுப்பேற்பு.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 4 கல்வி மாவட்டங்களில் 3 கல்வி மாவட்டங்களுக்குமாவட்ட கல்வி அதிகாரிகள் இல்லாமல்செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று 3 புதிய அதிகாரிகள் நிரந்தரமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், நகர், எஸ்.எஸ்.குளம், பேரூர், பொள்ளாச்சி ஆகிய, நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், எஸ்.எஸ்.குளம் தவிர, மற்ற மூன்று கல்வி மாவட்டங்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,) நியமிக்காததால், தலைமையாசிரியர்களே பொறுப்பு அதிகாரிகளாக இருந்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று பள்ளிக்கல்வித்துறையில் நிர்வாக ரீதியான, 11 டி.இ.ஓ.,க்களுக்கு, இடமாறுதல் வழங்கப்பட்டது. இதன்படி கோவையில், பேரூர் தவிர மற்ற மூன்று கல்வி மாவட்டங்களில், நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். à®‡à®Ÿà®®à®¾à®±à¯à®¤à®²à¯ உத்தரவுக்கு பிறகு, கோவையில் மூன்று கல்வி மாவட்டத்திற்கு, நிரந்தர டி.இ.ஓ.,க்கள் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்ட அலுவலராக இருந்த கீதா, திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் கல்வி மாவட்டத்திற்கு, இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. வேடசந்துார் டி.இ.ஓ., வாக பணியாற்றிய, விஜயேந்திரன் எஸ்.எஸ்.குளம், டி.இ.ஓ., வாக இடமாறுதல் பெற்றுள்ளார்.

இதே போல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு, குன்னுார் டி.இ.ஓ., வாக பணியாற்றிய, பாண்டியராஜசேகரன் இடமாறுதல் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே, கோவை, செம்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக, பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. à®ªà¯Šà®³à¯à®³à®¾à®šà¯à®šà®¿ டி.இ.ஓ., வாக, கிருஷ்ணகிரி டி.இ.ஓ., கலாவதி நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...