நவ ஜோதிர்லிங்க யாத்திரை: கோவையிலிருந்து செல்வோர் ஈரோட்டிலிருந்து சிறப்பு ரயில் மூலம் முன்பதிவு செய்யலாம்

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு ,நவஜோதி லிங்கங்களை தரிசிக்க கோவையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு, நவஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயில் மார்ச், 8ம் தேதி இயக்கப்படுகிறது.



கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு ,நவஜோதி லிங்கங்களை தரிசிக்க கோவையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. கோவை ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு, நவஜோதிர்லிங்க யாத்திரை சிறப்பு ரயில் மார்ச், 8ம் தேதி இயக்கப்படுகிறது.

திருநெல்வேலியில் இருந்து மார்ச், 8ம் தேதி புறப்படும் ரயில் மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், சென்னை வழியாக மகாராஷ்டிர மாநிலத்தில் திரையம்பகேஷ்வர், பீம்சங்கர், குருஸ்ணேஸ்வர், அவுங்நாக்நாத், பார்லி வைத்யநாத், குஜராத்தில் சோம்நாத், மத்தியபிரதேசத்தில் ஓம்காரேஸ்வர், உஜ்ஜெயின் மகாகாலேஸ்வர், ஆந்திராவில் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் என ஒன்பது ஜோதிர்லிங்கங்களையும் தரிக்கலாம்.

கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து புறப்படுவோர், ஈரோடு ஸ்டேஷனில் இருந்து பயணிக்கலாம். 13 நாட்கள் கொண்ட யாத்திரைக்கு, 15 ஆயிரத்து, 350 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விபரங்கள், முன்பதிவுக்கு 82879 31965, 9003140655 ஆகிய எண்களிலும், www.irctctourism.com எனும் இணையதள முகவரியிலும், தொடர்புகொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...