டிசம்பர் மாதக் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்தலாம்: கோவை மின் வாரியம் அறிவிப்பு!

கோவை: ஜனவரி மாதத்துக்கான மின் கணக்கீடு செய்யாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் டிசம்பர் மாதம் செலுத்திய அதே தொகையை இந்த மாதமும் செலுத்தலாம் என்று மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.


கோவை: ஜனவரி மாதத்துக்கான மின் கணக்கீடு செய்யாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் டிசம்பர் மாதம் செலுத்திய அதே தொகையை இந்த மாதமும் செலுத்தலாம் என்று மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கோவை மாநகர் டாடாபாத் செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் கூறியதாவது:- கோவை நகரிய கோட்டத்துக்கு உட்பட்ட சாய்பாபா காலனி, கணபதி, தண்ணீர்பந்தல் பிரிவு அலுவலகங்களில் நிர்வாகக் காரணங்களால், இம்மாதத்துக்கான மின் கணக்கீடு செய்யப்படவில்லை.

எனவே சாய்பாபா காலனி அலுவலகத்தின் ராமலிங்க நகர், காளியம்மன் கோயில், டோபிகானா, சாந்தி நகர் பகிர்மானம், கணபதி அலுவலகத்தின் ஆர்.கே.புரம் பகிர்மானம் மற்றும் தண்ணீர்பந்தல் அலுவலகத்தின் சேரன் மாநகர் பகிர்மானத்துக்குட்பட்ட மின் நுகர்வோர் டிசம்பர் மாத மின் கட்டணத்தையே இம்மாதமும் செலுத்தலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...