கலப்பு திருமணம் செய்த பெற்றோர் குறிப்பிடும் சாதியில் பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்க உத்தரவு..!

கலப்பு திருமணம் செய்யும் தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பான முக்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


கலப்பு திருமணம் செய்யும் தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பான முக்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய் அல்லது தந்தையின் சாதி அடிப்படையில், அவர்கள் அறிவிப்பின் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை செயலாளர் சந்திரமோகன் அரசாணை வெளியிட்டுள்ளார்.

அவ்வாறு பெற்றோரின் அறிவிப்பின் அடிப்படையில், அத்தகைய சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதன் மூலம், அத்தகைய குழந்தைகளுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப பொருத்தமான சாதி சான்றிதழ்களை வழங்குமாறு அரசு வருவாய் துறையில் உள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பின், முதல் குழந்தைக்கு அளிக்கப்பட்டுள்ள சாதி சான்றிதழின் அடிப்படையில் தான் மற்ற குழந்தைகளுக்கும் வழங்கப்படும், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...