சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற கோவை முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு!

கோவை: வருகிற சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற கோவையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேர்வு செய்து தயார் நிலைப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.


கோவை: வருகிற சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற கோவையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேர்வு செய்து தயார் நிலைப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தல் பணியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளதால், ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில், முன்னாள் படைவீரர்கள் சிறப்புக் காவலர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இந்தப் பணிக்கு ஆர்வமுள்ள, உடல் பலம் உள்ள, 65 வயதுக்கு உட்பட்ட கோவையை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். அடையாள அட்டை மற்றும் படைப்பணி விவரச்சான்றுகளுடன், கோவை முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம். இதற்கு, அரசு விதிமுறைகளின் படி ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...