இரும்பு கர்டர் அமைக்கும் பணி: கோவை வழியாக செல்லும் ரயில் வழித்தடம் மாற்றியமைப்பு!

கோவை: கேரளாவில் இரும்பு கர்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கோவை வழியாக செல்லும் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கேரளாவில் இரும்பு கர்டர் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் கோவை வழியாக செல்லும் ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கேரளாவில் ரயில்வே பாலத்தில் 'இரும்பு கர்டர்' மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக, கோவை வழி ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் - செகந்திராபாத் தினசரி சிறப்பு ரயில் (07229) நாளையும், 24ம் தேதியும் ஆலப்புழா வழியாக மாற்றி இயக்கப்படுகிறது. செங்கனுார், கோட்டயம் வழித்தடத்தில் ரயில் செல்லாமல் ஆலப்புழா, எர்ணாகுளம் வழியாக இவ்விரு நாட்களும் மாற்றி இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...