கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை இன்று முதல் துவக்கம்.

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை பயன்பாட்டிற்கு வந்தது.


கோவை: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், பொதுமக்கள் புகார் செய்ய, வசதியாக அனைத்து மாவட்டங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதில், 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள், எனவும் மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு காண்பதற்காக "1950" என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது என்று 

தெரிவிக்கப்பட்டுள்ளது.



வாக்காளர் அடையாள அட்டை பதிவு, படிநிலை புகைப்பட வாக்காளர் அட்டை அச்சிடுதல் மற்றும் விநியோகம் ஓட்டுச்சாவடி தொகுதி விவரங்கள் அறிதல், தேர்தல் அதிகாரிகள் பற்றி அறிதல், புகார் அல்லது குறைகளை பதிவு செய்யவும், இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...