கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு!

கோவை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.


கோவை: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோவை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

கோவை மாநகராட்சியின்‌ தீவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளினாலும்‌, மாநகர மக்களின்‌ ஒத்துழைப்பினாலும்‌ தற்போது கொரோனாவின்‌ பாதிப்பு குறைந்த நிலையில்‌ உள்ளது. கொரோனா பரவுதலைத் தடுக்க கொரோனா நோய்‌ தடுப்பூசியை பொதுமக்கள்‌ அனைவரும்‌ போட்டுக்கொள்வது அவசியமானதாகும்‌. மேலும்‌, தற்போது கொரோனா தாக்கம்‌ குறிப்பிட்ட சில மாநிலங்களில்‌ அதிகரித்து வரும்‌ சூழலில்‌ 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்‌ மற்றும்‌ இணை நோய்கள்‌ உள்ள 45 வயதுக்கும்‌ மேற்பட்டவர்கள்‌ இத்தடுப்பூசியை போட்டுக்கொள்வது மிகவும்‌ அவசியமானதாகும்‌.

அனைத்து அரசு மருத்துவமனைகள்‌ மற்றும்‌ அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும்‌இத்தடுப்பூசியானது இலவசமாக பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. பொதுமக்கள்‌ இதில்‌ தனிகவனம்‌ செலுத்தி, கொரோனா நோய்‌ தொற்றிலிருந்து தங்களையும்‌, தங்கள்‌ சமூகத்தையும்‌ பாதுகாக்கும்‌ வண்ணம்‌ தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

எனவே பொதுமக்கள்‌ தவறாமல்‌ தடுப்பூசியை போட்டுக்கொள்ளவும்‌. எங்கு சென்றாலும்‌ தவறாமல்‌ முகக்கவசம்‌ அணியவும்‌, அடிக்கடி சோப்பினால்‌ கைகளைக்‌ கழுவவும்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. பொதுமக்கள்‌ மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து கொரோனா இல்லாத கோயம்புத்தூர்‌ மாநகராட்சியாக உருவாக்கிட ஒத்துழைப்பு நல்க வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ குமாரவேல்‌ பாண்டியன்‌‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...