கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்..!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான, ராஜாமணி இன்று வெளியிட்டுள்ளார்.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான, ராஜாமணி இன்று வெளியிட்டுள்ளார்.

மேட்டுப்பாளையம்

அதன்படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்: 94450 00245. 

சூலூர்

சூலூர் தொகுதிக்கு, உதவி ஆணையர் (நகர்புற நிலவரி) வி. சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்: 99949 68613. 

கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம் தொகுதிக்கு, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர், ரவிசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்: 9445924164. 

கோவை வடக்கு 

கோவை வடக்கு தொகுதிக்கு தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்: 94422 92741. 

தொண்டாமுத்தூர்

தொண்டாமுத்தூர் தொகுதிக்கு, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்: 94450 00442.

கோவை தெற்கு

கோவை தெற்கு தொகுதிக்கு, மாநகராட்சி உதவி கமிஷனர், மத்திய மண்டலம் சிவ சுப்ரமணியமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்:9489206055.

சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் தொகுதிக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், ராம் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்: 94430 89804. 

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அம்சவேணி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்: 94454 77853. 

பொள்ளாச்சி 

பொள்ளாச்சி தொகுதிக்கு, பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்திநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்: 94450 00445. 

வால்பாறை

வால்பாறை தொகுதிக்கு, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது கைபேசி எண்: 63827 93328.

பாக்ஸ் : பறக்கும் படை விவரங்கள்

கோவை மாவட்டத்தில் செலவினக் கண்காணிப்புக்காக 30 பறக்கும் படை குழுக்கள், 30 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 20 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் ஆணையத்தால் கொண்டு வரப்பட்ட C-Vigil செயலி மூலம் புகார்களை பொதுமக்கள் வீடியோ அல்லது புகைப்படம் மூலம் பதிவு செய்யலாம். இப்புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணியில் 21,500 பணியாளர்கள்

வாக்குப்பதிவின் போது தேர்தல் பணிக்காக மொத்தம் 21 ஆயிரத்து 500 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் 353 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு அதற்கான மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தேர்தல்களுக்காக பயன்படுத்த வேண்டி 5 ஆயிரத்து 523 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 7 ஆயிரத்து 414 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 5 ஆயிரத்து 912 விவிபேட் இயந்திரங்களும் முதனிலை சரிபார்ப்பு பணி முடிந்து தயார் நிலையில் உள்ளன. 

தபால் வாக்கு 

இத்தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் சமயத்தில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள், அவர்களின் விருப்பத்தின் பேரில் தங்கள் வாக்குகளை தபால் வாக்குகளாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்படும். இக்குழுக்கள் வரும் 16ம் தேதி முதல் வாக்காளர்கள் தபால் வாக்கு பெறுவதற்காக படிவம் 12டி பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது வாக்குச் சாவடி அலுவலரிடம் அளிப்பார்கள்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெறும். இதற்கென பத்து வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...