உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனே ஒப்படைக்க கலெக்டர்  உத்தரவு.

உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனே ஒப்படைக்க கலெக்டர்  உத்தரவு.


கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தன்னுடைய பாதுகாப்பிற்காக துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்து இருக்கக்கூடியவர்கள் உடனடியாகஅந்தப் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும், என மாவட்ட கலெக்டர் ராசாமணி தெரிவித்துள்ளார். மேலும், காலதாமதம் ஆகும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருப்பதால், கோவை புறநகர் பகுதியில் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் அல்லது அங்கீகாரம் பெற்ற படைகலன் பாதுகாப்பு கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும். அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாா? என்பதை, மாவட்ட காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும். 

மத்திய, மாநில காவல் பணியில் இருப்போரும், வங்கித்துறையில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ளும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்களும் துப்பாக்கி வைத்திருப்பதற்கு, விலக்கு அளிக்கப்படுகிறது என, மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...