கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியில் பெயர் சேர்க்க இதுவரை 12,576 பேர் விண்ணப்பம் - அதிகாரிகள் தகவல்!

கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 576 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 576 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கோரி வரும் 19ம் தேதி வரை விண்ணப்பிக்க முடியும். அதன்பின்னர் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் தற்போதைய சட்டமன்ற தேர்தலில் சேர்க்க இயலாது.

கடந்த 20ம் தேதி முதல் தற்போது வரை 12 ஆயிரத்து 576 பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக்கோரி நேரிடையாகவும், ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களில் 8 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...