கோவை போலீஸ் துறையில் அடுத்தடுத்து அதிரடி மாற்றம்..! ஐ.ஜி மற்றும் எஸ்.பி மாற்றம்

கோவை: கோவையில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவை காவல்துறையில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜியாக பணிபுரிந்து வந்த தினகரன் மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி,ஆக பணிபுரிந்து வந்த அருள் அரசு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.



கோவை: கோவையில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவை காவல்துறையில் அடுத்தடுத்த மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜியாக பணிபுரிந்து வந்த தினகரன் மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி,ஆக பணிபுரிந்து வந்த அருள் அரசு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்து வந்த மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் ஆகியோர் ஒருதலைப்பட்சமாக, அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக திமுக சார்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த வாரம் இருவரும் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய கலெக்டராக நாகராஜ் மற்றும் புதிய கோவை சிட்டி கமிஷனராக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமிக்கப்பட்டனர்.



இந்த நிலையில், சற்று முன்பு மேற்கு மண்டல ஐ.ஜியாக பணிபுரிந்து வந்த தினகரன் மற்றும் கோவை மாவட்ட எஸ்.பி,ஆக பணிபுரிந்து வந்த அருள் அரசு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதிய மாவட்ட கண்காணிப்பாளராக, செல்வ நாகரத்தினம் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி அமல்ராஜ் à®†à®•ியோர் புதிய அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...