பயணிக்க ஆர்வம் இல்லாததால் கோவை-சென்ட்ரல் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் ரத்து!

கோவை: கொரோனா தொற்றுப் பரவலால் வெளியூர் பயணிக்க மக்களிடையே ஆர்வம் இல்லாததால் கோவை - சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கோவை: கொரோனா தொற்றுப் பரவலால் வெளியூர் பயணிக்க மக்களிடையே ஆர்வம் இல்லாததால் கோவை - சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில், “கோவை - சென்னை சென்ட்ரல் இடையேயான சதாப்தி சிறப்பு ரயில்(06029/30), கோவை - கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையிலான உதய் சிறப்பு ரயில்(06153/54) ஆகியவை நேற்று முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது.

கொச்சுவேலி - பனஸ்வாடி வாரந்திர ரயில்(06319) ரயில் நேற்று முதலும், பனஸ்வாடி - கொச்சுவேலி வாராந்திர ரயில்(06320)இன்று முதலும் ரத்து செய்யப்படுகின்றன. எர்ணாகுளம் - பனஸ்வாடி வாராந்திர ரயில்(06129) மே, 3ம் தேதி முதலும், பனஸ்வாடி - எர்ணாகுளம் வாராந்திர ரயில்(06130) மே, 4ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...