மயிலாடுதுறை உட்பட மூன்று நகரங்களில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து..!

கோவை: பயணிகள் வருகை குறைந்ததால், மயிலாடுதுறை உட்பட மூன்று நகரங்களில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


கோவை: பயணிகள் வருகை குறைந்ததால், மயிலாடுதுறை உட்பட மூன்று நகரங்களில் இருந்து, கோவைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவையில் இருந்து, மயிலாடுதுறைக்கு, வாரத்தில் ஆறு நாட்கள், காலை, 7:10 மணிக்கும்; மயிலாடுதுறையில் இருந்து, கோவைக்கு, வாரத்தில் ஆறு நாட்கள், மதியம், 2:50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவிலில் இருந்து, கோவைக்கு தினமும் காலை, 7:35 மணிக்கும்; கோவையில் இருந்து, நாகர்கோவிலுக்கு, தினமும், காலை, 8:00 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன.

கோவையில் இருந்து, கர்நாடகா மாநிலம், மங்களூருக்கு, தினமும் காலை, 7:55 மணிக்கும்; மங்களூரில் இருந்து தினமும் காலை, 9:00 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக பயணியர் வருகை குறைந்ததால், இந்த ரயில்கள் வரும், 14ம் தேதியில் இருந்து, 31ம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...