கொரோனா பரவல்: பொள்ளாச்சி வழியாக தமிழகம்-கேரளா இடையேயான ரயில் சேவை தற்காலிக நிறுத்தம் - ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

கோவை: கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பொள்ளாச்சி வழியாக தமிழகம்-கேரளா இடையேயான ரயில் சேவை தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பொள்ளாச்சி வழியாக தமிழகம்-கேரளா இடையேயான ரயில் சேவை தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள கர்நாடகா, கேரளா, தமிழகம், உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் பொதுமக்களிடையே கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ள நிலையில், அந்தந்த மாநில நிர்வாகம் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

இதில் முக்கியமாக இந்தியாவிலுள்ள பல மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து போன்றவை நோய்த்தொற்று காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் போதுமான பயணிகள் வராததின் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து புறப்படும் அமிர்தா சிறப்பு ரயில் வரும் மே 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதேபோல் தமிழகத்திலுள்ள மதுரை சந்திப்பிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதிக்குச் செல்லும் அமிர்தா சிறப்பு ரயில் வரும் மே மாதம் 16ம் தேதியிலிருந்து ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாலக்காடு உட்கோட்ட ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...