பால் அட்டை விற்பனையை அதிகரிக்க கூடுதல் சலுகை... ஆவின் நிறுவனம் அறிவிப்பு... கோவை கலெக்டர் அறிக்கை..!

கோவை: பால் அட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், முதல்வர் அறிவித்த விலைக்குறைப்புடன் கூடுதல் சலுகையை, ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, கோவை கலெக்டர் நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


கோவை: பால் அட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், முதல்வர் அறிவித்த விலைக்குறைப்புடன் கூடுதல் சலுகையை, ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, கோவை கலெக்டர் நாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பால் அட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், ஆவின் நிறுவனம் அறிவித்துள்ள சலுகை குறித்து, கோவை கலெக்டர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பால் நுகர்வோர் நலன் கருதி, ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, ஆவின் பால் அட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்துடன், பால் அட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் இருந்து, நீல நிற பால் பாக்கெட் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாயும், மற்ற நிற பால் பாக்கெட்களுக்கு, லிட்டருக்கு 2 ரூபாய் வரையிலும் விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. பால் அட்டைதாரர்களுக்கு, 500 மில்லி நீல நிற பாக்கெட் 18.50 ரூபாய், பச்சை நிற பாக்கெட் 21 ரூபாய், ஆரஞ்சு நிற பாக்கெட் 23 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பால் அட்டைகளை, www.aavincoimbatore.com என்ற இணையதளம் மூலமாகவும் பெறலாம். விவரங்களுக்கு, 1800 4254 4777 என்ற வாடிக்கையாளர் சேவை எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...