வங்கக் கடலில் உருவாகிய புயலால் கோவை ரயில்கள் ரத்து..!

கோவை: வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஷ் புயலின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.


கோவை: வங்கக் கடலில் உருவாகியுள்ள யாஷ் புயலின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

தமிழகத்தில் வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு யாஷ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயலின் காரணமாக, கோவை ஈரோடு சேலம் வழியாக இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி நாகர்கோவில் ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (02659), இன்றும், ஷாலிமார் நாகர்கோவில் ரயில் (02660), வருகிற 26-ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது. எர்ணாகுளம் பாட்னா வாராந்திர ரயில் (02643), நாளையும் 25-ஆம் தேதியும்,, பாட்னா எர்ணாகுளம் வாரந்திர ரயில் (02644), வருகிற 27, 28- ஆம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம் சில்சார் வாராந்திர சிறப்பு ரயில் (02507) மற்றும் ஷாலிமார் திருவனந்தபுரம் வாராந்திர ரயில் (02642) வருகிற 25-ம் தேதியும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...