தொழிற்சாலை பணியாளர்களுக்கு தடுப்பூசி... கோவை மாவட்ட ஆட்சியர் உறுதி..!

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையின் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தில், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னுரிமை அடிப்படையில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், சமையல் கியாஸ் விநியோகம் செய்வோர், நாளிதழ் விநியோகம் செய்வோர், பால் விநியோகம் செய்வோர், மருந்தகங்களில் பணிபுரிவோர், பஸ் டிரைவர், கண்டக்டர்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், பெட்ரோல் பங்க் பணியாளர்கள், உணவு விநியோகம் செய்வோர், கட்டுமானப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், செய்தியாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், வெவ்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும், 9,464 பேருக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டது. தொழிற்சங்கங்கள், தொழிற்துறை கூட்டமைப்பு, வணிக சங்கங்களுடன் இணைந்து, தினமும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், 18 முதல் 44 வயதுள்ள பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...