கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட 45 வயதுக்குட்பட்டவர்கள்... வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைகள்‌ மேற்கொள்ள ஆலோசணை..!

கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா நோய்த்தொற்றில்‌ பாதிக்கப்பட்ட 45 வயதுக்குட்பட்டவர்களில்‌ உடலின்‌ ஆக்சிஜன்‌ அளவு 94%-க்கு மேல்‌ உள்ளவர்கள்‌ மற்றும்‌ இணை நோய்கள்‌ இல்லாதவர்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைகள்‌ மேற்கொள்ள ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா நோய்த்தொற்றில்‌ பாதிக்கப்பட்ட 45 வயதுக்குட்பட்டவர்களில்‌ உடலின்‌ ஆக்சிஜன்‌ அளவு 94%-க்கு மேல்‌ உள்ளவர்கள்‌ மற்றும்‌ இணை நோய்கள்‌ இல்லாதவர்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைகள்‌ மேற்கொள்ள ஆலோசணை வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ கொரோனா நோய்த்தொற்றில்‌ பாதிக்கப்பட்ட 45 வயதுக்குட்பட்டவர்களில்‌ உடலின்‌ ஆக்சிஜன்‌ அளவு 94%-க்கு மேல்‌ உள்ளவர்கள்‌ மற்றும்‌ அதிக இரத்த அழுத்தம்‌, சக்கரை நோய்‌ மற்றும்‌ இணை நோய்கள்‌ இல்லாதவர்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சைகள்‌ மேற்கொள்ள ஆலோசணைகள்‌ வழங்கும்‌ பொருட்டு, Home Triage மருத்துவ குழுக்கள்‌ அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு மண்டலத்திற்கு இரண்டு Home Triage மருத்துவ குழுக்கள்‌ வீதம்‌ ஐந்து மண்டலத்திற்கு 10 Home Triage மருத்துவ குழுக்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்குழுவில்‌ ஒரு மருத்துவர்‌ மற்றும்‌ இரண்டு செவிலியர்கள்‌ நியமனம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌.

மேலும்‌, இக்குழுவினர்‌ வீடுகளுக்கே வந்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கொரோனா நோய்த்தொற்றில்‌ பாதிக்கப்பட்டவர்கள்‌ மேற்கண்ட Home Triage மருத்துவ குழுக்கள்‌ அறிவுரையின்படி தேவையான மருந்துகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல்‌ வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. ஏதேனும்‌ உதவிகள்‌ தேவைப்படின்‌ (மருத்துவ ஆலோசனை உட்பட) 24 மணி நேரமும்‌ செயல்படும்‌ கட்டுப்பாட்டு அறை எண்‌ 0422- 2302323-க்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, மேற்கண்ட வசதிகளை பொதுமக்கள்‌ பயன்படுத்தி அரசின்‌ சுகாதார வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி கொரோனா நோய்‌த் தொற்று இல்லாத மாநகராட்சியாகத் திகழ்ந்திட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலா்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...