தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..! கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!

கோவை: கோவை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு, ஆசிரியர்களுக்கு தெரிவிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



கோவை: கோவை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு, ஆசிரியர்களுக்கு தெரிவிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில், கல்வி, சமூக மேம்பாட்டிற்கு உழைக்கும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இதற்கு, மத்திய அரசின் இணையதளத்தில் (http:/nationalawardstoteachers.education.gov.in) வரும் 20ம் தேதிக்குள், ஆசிரியர்களே நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும், மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் மட்டுமே, இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முடியும். ஓய்வு பெற்றவர்கள், அலுவலக பணியில் ஈடுபடுவோர், விண்ணப்பிக்க கூடாது. கடந்த கல்வியாண்டில், குறைந்தபட்சம் நான்கு மாதங்களாவது பணியாற்றி இருப்பவர்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...