கோவை - ஜபல்பூர் இடையே வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

கோவை: கோவை மற்றும் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் இடையே, வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மற்றும் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் இடையே, வாராந்திர சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜபல்பூரில் இருந்து கோவைக்கு, வரும் 11ம் தேதி முதல் ஜூலை, 30ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில்(02198) இயக்கப்படுகிறது. ஜபல்பூரில் இருந்து வெள்ளிதோறும் இரவு, 11:50 மணிக்கு புறப்படும் ரயில், ஞாயிறு மாலை, 5:10க்கு கோவை வந்தடைகிறது.

அதேபோல, கோவையில் இருந்து ஜபல்பூருக்கு வரும், 14 முதல் ஆக., 2ம் தேதி வரை சிறப்பு ரயில்(02197) இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து திங்கள்தோறும் மதியம், 3:30க்கு புறப்படும் ரயில் புதன் காலை, 8:45க்கு ஜபல்பூர் அடைகிறது. இத்துடன், இரண்டடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டி ஒன்று, மூன்றடுக்கு ஏ.சி., வகுப்பு பெட்டிகள் ஐந்து, ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள் ஒன்பதும் இணைக்கப்பட்டிருக்கும்.

மேலும் பாலக்காடு, கோழிக்கோடு, மங்களூர் உள்ளிட்ட நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்கிறது. எட்டு சேவைகள் கொண்ட, கோவை - ஜபல்பூர் இடையேயான சிறப்பு ரயிலுக்கு, முன்பதிவு நடந்து வருவதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...