கோவை மாவட்டத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம்!

கோவை: கோவை மாவட்டத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 7 டி.எஸ்.பி.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி டிஎஸ்பி சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக மதுரை மாவட்டம் சமயநல்லூர் பணிபுரிந்து வந்த ஆனந்த் ஆரோக்கியராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சூரியமூர்த்தி தென்காசி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் டிஎஸ்பியாக பணியாற்றிய திருமால் கோவை மாவட்ட பேரூர் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கு பணியாற்றிய சீனிவாசலு ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஆக மாற்றப்பட்டார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி கன்னியாகுமரி மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பி ஆக மாற்றப்பட்டார்.

கன்னியாகுமரியில் பணிபுரிந்த பீட்டர் பால் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் நெல்லை மாநகரில் காலியாக உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி டிஎஸ்பி சிவகுமார் சிவகங்கை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு டிஎஸ்பி ஆக மாற்றப்பட்டார். இங்கு பணியாற்றிய மோகன் தம்பி ராஜன் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் டிஎஸ்பி ஜெய்சிங் மேட்டுப்பாளையம் டிஎஸ்பியாக மாற்றப்பட்டார். இங்கு பணிபுரிந்த ஆரோக்கியராஜ் தென்காசி மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...