கோவை மாவட்டத்தில் 58 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்!

கோவை: கோவை மாவட்டத்தில் 58 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் 58 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கோவை மாவட்டத்தில் துறை வாரியாக அதிகாரிகள் முதல் உதவியாளர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களிடம் மாற விருப்பமான அளித்தவர்கள் என பலரும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறையில் முதல்கட்டமாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சூலூர் பிடிஓ ஊராட்சிகள் சுப்புலட்சுமி ரெகுலர் பிடிஓ வாக இடமாற்றம் செய்யப்பட்டார். சுல்தான்பேட்டை பிடிஓ ரவிச்சந்திரன் சூலூர் பி.டி.ஓ.வாக பொறுப்பேற்றுள்ளார்.

இதேபோல, மாவட்டம் முழுக்க 58 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 21 உதவியாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...