கோவை மாவட்டத்தில் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு!

கோவை: கோவை மாவட்டத்தில் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை மாவட்டத்தில் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் வெளியிட்ட அறிக்கையில், சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் 'முதல்வர் மாநில இளைஞர் விருது', ஆண்டு தோறும் சுதந்திர தினத்தில் வழங்கப்படுகிறது.

15 முதல் 35 வயது வரை உள்ள தலா 3 ஆண்கள், பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம், பதக்கம் வழங்கப்படும். 2020- 21ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்க இயலாது. மேலும் விபரங்களை, https://www.sdat.tn.gov.in/ல் பார்க்கலாம். வரும், 30க்குள் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...