கோவை மங்களூரு சிறப்பு ரயில் இயக்கம் வருகிற 25-ஆம் தேதி முதல் தொடங்கும்

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகளோடு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, கோவை மங்களூரு சிறப்பு ரயில் இயக்கம் வருகிற 25-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஊரடங்கு தளர்வுகளோடு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, கோவை மங்களூரு சிறப்பு ரயில் இயக்கம் வருகிற 25-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மங்களூரு இடையே வருகிற 25-ஆம் தேதி முதல் தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து வருகிற 24-ஆம் தேதி முதல் தினமும் காலை 11 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் 6.30 மணிக்கு கோவைக்கு வந்து அடையும். கோவையிலிருந்து 25-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அன்று மதியம் 1.15 மணிக்கு மங்களூரு சென்றடையும். இந்த சிறப்பு ரயில் பாலக்காடு, ஒத்தப்பாலம், சோரனூர், பரப்பாடி, கோழிக்கோடு, வடகரை, தலச்சேரி, கண்ணூர், பையனூர், காசர்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்'' என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், ‘‘கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்த புதுடெல்லி ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்கு கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வருகிற 17-ஆம் தேதி இரவு 7 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மாலை 5.30 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்றடையும். வருகிற 20-ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை 5:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை காலை 330 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, விஜயவாடா, வாரங்கள், நாக்பூர், போபால், ஜான்சி, குவாலியர், ஆக்ரா, மதுரா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...