கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தற்காலிக அரசு ஊழியர்கள் நியமனம்..! தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - மருத்துவமனை முதல்வர் தகவல்!

கோவை: கோவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தற்காலிக அரசு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் தற்காலிக அரசு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனையின் முதல்வர் ரவீந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா தொற்று காரணமாக நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை மையத்தில் 6 மாதத்திற்கு தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நர்சுகள், ஊழியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அதன்படி 75 நர்சுகள், 15 ஆய்வக டெக்னீசியன்கள், 55 பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், 8 ரேடியோ கிராபர்கள், 8 டயாலிசிஸ் டெக்னீசியன்கள், 20 இசிஜி டெக்னீசியன்கள், 10 சிடி டெக்னீசியன்கள், 15 மயக்கவியல் நிபுணர் கள், 6 மருந்து ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு ரூ.12,000 முதல் ரூபாய் 15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்கள், அனுபவம் சான்றிதழ்களுடன் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையை அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...