கோவை மாநகராட்சியின்‌ கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளில்‌ குடிநீர் விநியோகம்‌ நிறுத்தம்..!

கோவை: கோவை மாநகராட்சியில் நெடுஞ்சாலைத் துறையினரால்‌ பாலம்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெறுவதால் கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளில்‌ குடிநீர் விநியோகம்‌ நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் நெடுஞ்சாலைத் துறையினரால்‌ பாலம்‌ கட்டும்‌ பணிகள்‌ நடைபெறுவதால் கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளில்‌ குடிநீர் விநியோகம்‌ நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரியத்தால்‌ பராமரிக்கப்படும்‌ கவுண்டம்பாளையம்‌ - வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தில்‌ பெரியநாயக்கன்பாளையம்‌ அருகே 600 மி.மீ விட்டமுள்ள சுத்த நீர்‌ கொணரும்‌ குழாய்‌ பதிக்கப்பட்ட பகுதிகளில்‌ நெடுஞ்சாலைத் துறையினரால்‌ பாலம்‌ கட்டும்‌ பணிகள்‌ 14.07.2021 முதல்‌ மேற்கொள்ளப்பட்டு இருப்பதால்‌, இத்திட்டத்தின்கீழ்‌ பயன்பெறும்‌ கோவை மாநகராட்சியின்‌ கவுண்டம்பாளையம்‌ மற்றும்‌ வடவள்ளி பகுதிகளில்‌ குடிநீர் விநியோகம்‌ நிறுத்தப்பட்டுள்ளது. 19.07.2021-க்குள்‌ பணிகள்‌ துரிதமாக முடிக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம்‌ செய்யப்படும்‌.

நாளது வரை பொதுமக்கள்‌ மாற்று ஏற்பாடாக மாநகராட்சி மூலம்‌ வழங்கப்படும்‌ கிணற்றுநீரினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...