கோவை அரசினர் ஐ.டி.ஐ.யில் சேர்வதற்கு நாளை கடைசி நாள்..!

கோவை: கோவை அரசினர் ஐ.டி.ஐ.யில் சேர்வதற்கு நாளை 28-ம் தேதி கடைசி நாள் என்று கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை அரசினர் ஐ.டி.ஐ.யில் சேர்வதற்கு நாளை 28-ம் தேதி கடைசி நாள் என்று கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் துணை இயக்குனர் மற்றும் முதல்வர் செல்வராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற் பிரிவுகளில் இந்த ஆண்டிற்கான சேர்க்கைக்கு இணையதளம் www.skill training.tn.gov.in மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க நாளை 28-ஆம் தேதி கடைசி நாளாகும்

இதற்கான சேர்க்கை கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி மாநில அளவிலான கலந்தாய்வு மூலம் நடைபெற உள்ளது. வெளியூரிலிருந்து பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு இன சுழற்சி மற்றும் விடுதி இருக்கைகளை அடிப்படையில் விடுதிகள் வசதி வழங்கப்படுகிறது.

மேலும், விபரங்களுக்கு 0422-2642041, 9442624516, 8667408507, 9443171698 மற்றும் 8012 040150 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...