கோவை மாநகரில் 308 போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம் - கமிஷனர் உத்தரவு

கோவை: கோவை மாநகரத்தில் உள்ள 15 காவல் நிலையங்களில், தொடர்ந்து ஒரே காவல் நிலையத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த காவலர்கள் நேற்று இரவு வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகரத்தில் உள்ள 15 காவல் நிலையங்களில், தொடர்ந்து ஒரே காவல் நிலையத்தில் மூன்று வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வந்த காவலர்கள் நேற்று இரவு வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றம் செய்து, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவிட்டுள்ளார்.

மொத்தம், கோவை மாநகரில் 308 போலீசாரை பணி இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கோவை ரேஸ்கோர்ஸ், காட்டூர், பீளமேடு, உக்கடம், குனியமுத்தூர், கடைவீதி, வரைட்டி ஹால் ரோடு, சரவணம்பட்டி, சிங்காநல்லூர், ரத்தினபுரி, ஆர்.எஸ். புரம், ராமநாதபுரம், சாய்பாபா காலனி, செல்வபுரம் ஆகிய 15 காவல் நிலையங்கள் உள்ளன. மாநகரில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். இந்த நிலையில், ஒரே காவல் நிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வந்த 308 போலீசாரை கோவை நகரில் உள்ள 15 காவல் நிலையங்களுக்குள் மாற்றி நேற்று இரவு போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதில், கான்ஸ்டபிள் முதல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரை மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...