பொதுமக்களிடம் கைப்பேசி மூலமாக தொடர்பு கொண்டு மோசடி! கோவை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

கோவை: கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளன.


கோவை: கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் இன்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளன.

அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சமீபகாலமாகத் தமிழகம் உட்படக் கோவை மாவட்டங்களில் பொதுமக்களிடம் கைப்பேசி மூலமாகத் தொடர்பு கொண்டு வடமாநில மொழிகலந்த தமிழ் பேசுவது போல் பேசி நாங்கள் மத்திய அரசு சார்பாகப் பேசுகிறோம்.

தமிழக அரசு எப்படி உங்களுக்கு கொரோனா நிவாரண நிதி 2 ஆயிரம் மற்றும் 2 தவணையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கினார்கள்.

அதேபோல மத்திய அரசும் உங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 6,700 வழங்கியுள்ளது. அதற்கான விபரங்கள் சேகரிப்பதற்காக தான் உங்களைத் தொடர்பு கொண்டோம்.

என கூறி அவர்களுடைய வங்கி கணக்கு, ஏடிஎம் நம்பர், ஓடிபி நம்பர் என அனைத்தையும் பெற்றுக் கொண்டு நூதனமான முறையில் வங்கியிலிருந்து பணங்களை கையாடல் செய்து வருகின்றன.

ஆதலால், இது போன்ற யாராவது போன் செய்து மத்திய அரசு கொரோனா நிவாரண நிதி சம்பந்தமாக பேசினால் மக்கள் யாரும் ஏமாற வேண்டாம். மத்திய அரசு அப்படி எந்த திட்டத்தையும் மக்களுக்கு அறிவிக்க வில்லை.

அப்படி யாராவது பேசினால் தங்களுடைய எந்தவிதமான வங்கி சம்பந்தமான ஆதாரங்களைத் தெரிவிக்க வேண்டாம் என மக்கள் ஏமாற வேண்டாம் என கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பாக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...