கோவை மாநகராட்சியின் 5 மண்டல உதவி வருவாய் அலுவலர்கள் திடீர் மாற்றம் - ஆணையர் ராஜகோபால் சுங்கரா உத்தரவு

கோவை: கோவை 5-மண்டலங்களுக்கு உட்பட்ட உதவி வருவாய் அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவை 5-மண்டலங்களுக்கு உட்பட்ட உதவி வருவாய் அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து மாநகராட்சியின் கீழ் பணியாற்றி வரக்கூடிய துணை ஆணையர் இல் இருந்து உதவி வருவாய் அதிகாரிகள் வரை தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

நேற்று நள்ளிரவு திடீரென கோவை 5-மண்டலங்களுக்கு உட்பட்ட உதவி வருவாய் அதிகாரிகள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் பணிபுரிந்த உதவி வருவாய் அலுவலர்கள் நேற்றிரவு மாற்றப்பட்டனர்.

அவர்களுக்குப் பதிலாக, கண்காணிப்பாளர்களாக பணிபுரிந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.

கிழக்கு மண்டலத்துக்குக் கிருபாகரன், தெற்கு மண்டலத்துக்கு சத்திய பிரபா, வடக்கு மண்டலத்துக்கு ஜூல்பிகார் அகமத் மேற்கு மண்டலத்துக்கு ராஜேந்திரன், மத்திய மண்டலத்துக்கு செந்தில்குமார் நியமிக்கப்பட்டனர்.

ஏற்கனவே உதவி வருவாய் அலுவலர்களாக பணியாற்றியவர்கள், வெவ்வேறு மண்டலங்களுக்குக் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

பணி மாறுதல் செல்லும் உதவி வருவாய் அலுவலர்கள், புதிதாகப் பொறுப்பேற்பவர்களிடம் நிலுவையில் உள்ள கோப்புகள் மற்றும் பதிவேடுகளை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...