ஹூப்ளியில் இருந்து கேரளா கொச்சுவேலிக்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்.!!

கோவை: கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: கர்நாடக மாநிலம், ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம், கொச்சுவேலிக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கூறியிருப்பதாவது:-

ஹூப்ளி ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 18-ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் மாலை 5-மணிக்குப் புறப்படும் வாராந்திர அதிவிரைவுச் சிறப்பு ரயில் (எண்-07359) மறுநாள் காலை 6.35-மணிக்கு கொச்சுவேலி நிலையத்தைச் சென்றடையும். இதேபோல, கொச்சுவேலி ரயில் நிலையத்திலிருந்து ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில்

நண்பகல் 12.50-மணிக்குப் புறப்படும் வாராந்திர அதிவிரைவுச் சிறப்பு ரயில்(எண்- 07360) மறுநாள் நண்பகல் 12.30-மணிக்கு ஹூப்ளி சென்றடையும். இந்த ரயிலானது, கொல்லம், செங்கனூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், பாலக்காடு, போத்தனூா், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...