கோவையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க தீவிர ஆய்வு - அதிகாரி தகவல்!

கோவை: கோவையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க தீவிர ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க தீவிர ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக, குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை தடுக்கும் நோக்கில், அரசின் குழந்தை தொழில் முறை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை பள்ளியில் சேர்க்கவும், வேலைக்கு அமர்த்தியவர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதனிடையே, கோவையில் குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா காலகட்டம் என்பதால் குடும்ப கஷ்டம் காரணமாக குழந்தைகள் யாரும் வேலைக்கு செல்கிறார்களா? என்பதை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதன்படி, கோவை மாவட்டத்தில், 2016-17ல் 5 சிறுவர்கள், 2017-18ல் 13 சிறுவர்கள், 2018-19ல் 8 சிறுவர்கள், 2019-20ல் 14 சிறுவர்கள், 2020-21ல் 5 சிறுவர்கள், வேலைக்கு அமர்த்திய நிறுவனங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட திட்ட அலுவலர் விஜயகுமார் கூறுகையில்:-

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைக்கக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது அரிது. டூவீலர் ஒர்க்ஷாப் போன்ற இடங்களில்தான், இத்தகைய தவறு நடக்கிறது. அதை தடுக்கவும், அவ்வாறு சிறுவர்கள் வேலையில் இருந்தால் மீட்கவும், தொடர்ந்து ரெய்டு நடத்தி வருகிறோம்.

கொரோனா சூழல் காரணமாக, சிறுவர்கள் வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அதை தடுக்கவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...