தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெற வரும் ஆக., 31ம் தேதி கடைசி நாள் - தமிழ் வளர்ச்சித் துறை அறிவிப்பு!

கோவை: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெற வருகிற ஆகஸ்டு 31ம் தேதி கடைசி நாளாகும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.



கோவை: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் பெற வருகிற ஆகஸ்டு 31ம் தேதி கடைசி நாளாகும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், தூய தமிழ் ஊடக விருது, நற்றமிழ் பாவலர் விருது, தூய தமிழ் பற்றாளர் விருது, தேவநேயப் பாவாணர், வீரமாமுனிவர் விருதுகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த விருதுகள், சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசுகளை கொண்டவை. விருது பெற விரும்புவோர், சான்றுகளை இணைத்து, ஆக.,31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை, சொற்குவை.காம் (sorkuvai.com) தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

நற்றமிழ் பாவலர் விருது, தூய தமிழ் சொற்களால் கவிதை புனையும் படைப்பாளர்களை ஊக்குவிக்க வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு இருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.நடைமுறை வாழ்க்கையிலும், தூய தமிழையே பயன்படுத்தும் தனித்தமிழ் பற்றாளர்கள் மூவருக்கு, தூய தமிழ் பற்றாளர் விருது வழங்கப்பட உள்ளது.

அகராதியியல் அறிஞருக்கு, தேவநேயப் பாவாணர் விருதும், தமிழை தாய்மொழியாக கொள்ளாத, சிறந்த தமிழ் படைப்புகளை வெளியிட்டுள்ள, தகுதி வாய்ந்தவருக்கு வீரமா முனிவர் விருதும், வழங்கப்பட உள்ளன. இந்த விருதுக்கு, ஒரு பவுன் தங்கப்பதக்கமும், ஒரு லட்சம் ரூபாய் பரிசும் உண்டு.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குனர், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம், நகர் நிர்வாக அலுவலக வளாகம், முதல் தளம் எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி., நகர், சென்னை 600 028' என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்கலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...