இளம் தொழில் முனைவோர்களை உருவாக்க கடனுதவி; தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு, மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

கோவை: இளம் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல கடனுதவி திட்டம் குறித்து, மாவட்ட கலெக்டர் சமீரன் தகவல் அளித்துள்ளார்.



கோவை: இளம் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தி அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல கடனுதவி திட்டம் குறித்து, மாவட்ட கலெக்டர் சமீரன் தகவல் அளித்துள்ளார்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 2021 – 2022 – ஆம் நிதியாண்டில் கோவை மாவட்டத்திற்கு யூ. ஓய்.ஈ.ஜி.பி திட்டத்தின் கீழ் 325 தொழில் திட்டங்களுக்கு ரூபாய். 185 லட்சம் மானியம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிதியாண்டில் கோவிட்-19 காரணமாக மேற்படி திட்டத்தில் தொழில் முனைவோர் விரைவில் தொழில் துவங்கும் பொருட்டு தேர்வுக்குழு மூலமாக நடக்கும், நேர்முகத்தேர்விலிருந்தும் திட்டங்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியிலிருந்தும் 30.09.2021 வரை மாநில அரசு விலக்கு அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

இத்திட்டத்தின், கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க தகுதி

* எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* 19 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

* பொதுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 36 மற்றும் சிறப்புப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது 45 க்குள் இருக்க வேண்டும்.

* கோவை மாவட்டத்தில் மூன்று வருடங்களுக்கு குறையாமல் தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும்.

* குடும்ப வருமானம் உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தங்கமணி சிறப்பு பிரிவு: பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் பிறபட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் தகுதியானவர்கள்.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூபாய் 15 லட்சம் முதலீட்டிலும் சேவை மற்றும் வியாபார தொழில்களை அதிகபட்சம் ரூபாய் 5 லட்சம் முதலீட்டில் தொழில் தொடங்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தமிழக அரசு சார்பில் 25 விழுக்காடு மானியம் அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம் வரை வழங்கப்படும். www.msmetamilnadu.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் வழிகாட்டுதலுக்கும் 8925533932 – 36 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

ஆகவே, தகுதியும், ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ் சமீரன் அழைப்பு விடுத்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...