நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் அல்லது குடியிருப்புகளுக்கு தடுப்பூசிகள் தேவையா? தடுப்பூசி முகாம் பதிவு படிவத்தை வெளியிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர்..!

கோவை: கோவை மாவட்டத்தில் பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், குடியிருப்பு சங்கங்கள் ஆகியவற்றுக்கான மொத்த தடுப்பூசி தேவைகளுக்கான தடுப்பூசி முகாம் பதிவு படிவம் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், குடியிருப்பு சங்கங்கள் ஆகியவற்றுக்கான மொத்த தடுப்பூசி தேவைகளுக்கான தடுப்பூசி முகாம் பதிவு படிவம் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்திற்கு இன்று புதிதாக 1,42,940 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில், 1,23,500 கோவிஷீல்ட் மற்றும் 19,440 கோவாக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் 77,050 கொரோனா தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவை நாளை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள பணியிடங்கள், கல்வி நிறுவனங்கள், முதியோர் இல்லங்கள், குடியிருப்பு சங்கங்கள், குடியிருப்புகள் போன்றவற்றுக்கு மொத்தமாக தடுப்பூசிகள் தேவைப்படுவோரிடமிருந்து பதிவுகள் வரவேற்கப்படுவதாகவும், பதிவு படிவத்தை கீழே உள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSekxtZaTPVwl1pgC3qeP3uwgMFNg8fjOMYjR4azH-X4A9YuGA/viewform?vc=0&c=0&w=1&flr=0

மேலும், ஆர்வமுள்ளவர்கள் தங்கள் தொடர்பு விவரங்கள், தேவையான அளவுகளின் எண்ணிக்கை, முன்மொழியப்பட்ட இடம் மற்றும் தடுப்பூசிக்கு விருப்பமான தேதி ஆகியவற்றை நிரப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...