வரும் 31ம் தேதி கோவை - மும்பை ரயில் சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக அறிவிப்பு!

கோவை: கோவை - மும்பை லோகமான்யா திலக் சிறப்பு ரயில், எர்ணாகுளம் - பெங்களூரு சிறப்பு ரயில் வருகிற 31ம் தேதி சேலத்தில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை - மும்பை லோகமான்யா திலக் சிறப்பு ரயில், எர்ணாகுளம் - பெங்களூரு சிறப்பு ரயில் வருகிற 31ம் தேதி சேலத்தில் இருந்து மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் உள்ள ரயில் வழித்தடத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வருகிற 31ம் தேதி கோவையில் இருந்து மும்பை லோகமான்யா திலக் நிலையத்துக்கு இயக்கப்படும்.

தினசரி சிறப்பு ரயில் (எண்- 01014), அன்று காலை 8.55 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, சேலத்தில் இருந்து திருப்பத்தூா், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருவைச் சென்றடைந்து, மும்பை லோகமான்யா திலக் நிலையத்துக்குச் செல்லும்.

இதனால், அன்றைய தினம் தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில் செல்லாது.

இதேபோல, எா்ணாகுளம்- பெங்களூரு இன்டா்சிட்டி சிறப்பு ரயில் (எண்- 02678) 31ம் தேதி, எா்ணாகுளத்தில் இருந்து காலை 9.10 மணிக்குப் புறப்பட்டு சேலத்தில் இருந்து திருப்பத்தூா், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக பெங்களூருவைச் சென்றடையும்.

இதன் காரணமாக இந்த ரயில் அன்றைய தினம் தருமபுரி, ஓசூர் ரயில் நிலையங்களுக்கு செல்லாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...