கோவையில் காவல்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம்.!! டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை.!!

கோவை: கோவையில் திடீரென காவல்துறை உயரதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவையில் திடீரென காவல்துறை உயரதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

கோவை மாவட்ட சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய சங்கு திருநெல்வேலி மாவட்டம் சைபர் கிரைம் குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவில் கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய தேவநாதன் கோவை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டாக பொறுப்பேற்கிறார்.

கோவை நகர சிறப்பு புலனாய்வு பிரிவில் உதவி கமிஷனராக பணியாற்றிய சந்திரசேகர் நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை பீளமேடு காவல்துறை நிலைய இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...