கோவை மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் பணியாற்றி வந்த ரேஷன் கடை ஊழியர்கள் 1000 பேர் இடமாற்றம்..!

கோவை: கோவை மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் பணியாற்றி வந்த ரேஷன் கடை ஊழியர்கள் 1000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் 3 ஆண்டுக்கு மேலாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் பணியாற்றி வந்த ரேஷன் கடை ஊழியர்கள் 1000 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் 1,423 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த 3 ஆண்டுக்கு மேலாக பணியிட மாற்றம் செய்யப்படாமல் பணியாற்றி வந்த 1000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் எடை அளவையாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றப்பட்டனர்.

மகளிர் சுய உதவி கடைகள் தவிர, இதர அனைத்து கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வழங்கல் பிரிவு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலர் தங்களை மீண்டும் பழைய கடைகளில் பணியிடமாற்றம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால், ரேஷன் கடைகளில் மீண்டும் பணி இடமாற்றம் செய்ய மறுத்து விட்டனர். சில அரசு ஊழியர்கள் மீது முறைகேடு விதிமுறை மீறல் புகார் இருப்பதாக தெரிகிறது.

இவர்கள் மீது கடந்த காலங்களில் கடும் நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டன. கடந்த காலங்களில் வழக்கு மற்றும் புகாரில் சிக்கிய ஊழியர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பணியிடம் மாற்றப்பட்ட பின்னர் கடைகளில் செயல்பாடுகளை ஆய்வு செய்ய கூட்டுறவு துறை வழங்கல் பிரிவு மற்றும் பறக்கும் படையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

ரேஷன் கார்டுதாரர்கள் அல்லாத நபர்கள், புரோக்கர்கள், கள்ளச் சந்தை வியாபாரிகள் கடைகளுக்கு வந்து செல்கிறார்கள் என ரெய்டு நடத்தி கண்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் புகாரின் பேரில் விசாரிக்க, கடத்தலை தடுக்க தேவையான முயற்சிகள் எடுக்க வேண்டும் என வளங்கள் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...