செப்டம்பர் 12-ல் கோவையில் 1,500-இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்.!! பங்கேற்க வருமாறு ஆட்சியர் சமீரன் அழைப்பு.!!

கோவை: செப்டம்பர் 12-ல் ஒரே நாளில் கோவையில் 1,500-இடங்களில் தடுப்பூசி முகாம் ஆட்சியர் சமீரன் அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: செப்டம்பர் 12-ல் ஒரே நாளில் கோவையில் 1,500-இடங்களில் தடுப்பூசி முகாம் ஆட்சியர் சமீரன் அழைப்பு விடுத்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 12 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 1,500 முகாம்கள் மூலம் 1.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 12-ம் தேதி 1.5-லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் அவர் பேசியதாவது:–

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் மிக முக்கியமானது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது.

கோவையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் தடுப்பூசி எளிதில் கிடைக்கும் விதமாகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 24-மணி நேரத் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் வரும் 12-ஆம் தேதி மாபெரும் சிறப்பு கொரோனா முகாம் நடைபெற உள்ளது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், நோய்த்தொற்றுப் பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகள், போக்குவரத்து வசதியற்ற பகுதிகள், மலைப் பகுதிகள், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

இம்முகாம்களில் காலை 7-முதல் இரவு 7-மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும். மாவட்டத்தில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், 2-ஆம் தவணைக்கு காத்திருப்பவர்களும் இச்சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாவட்டம் முழுவதும் 1,500-மையங்கள் அமைத்து 1.5-லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.



கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், பொள்ளாச்சி சாா் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆா்.சரண்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா் சந்திர, துணை இயக்குநா் பி.அருணா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...