வால்பாறையில் நாளை அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்..! பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள்!

கோவை: வால்பாறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது.


கோவை: வால்பாறையில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடைபெறுகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் நாளை அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வால்பாறை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கோவிஷீல்டு 1130, கோவாக்சின் 700 என 2010 பேர்களுக்கு 30 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

சோலையாறு நகர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சோலையாறு அணை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கோவிஷீல்டு 1440, கோவாக்சின் 810 என 2250 பேர்களுக்கு 15 மையங்களில் தடுப்பு ஊசி போடப்படுகிறது.

முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கோவிஷீல்டு 820, கோவாக்சின் 190 என 1010 பேர்களுக்கு 19 மையங்களில் போடப்படுகிறது. இதன் மூலம் வால்பாறை பகுதியில் 6 ஆயிரம் பேர்களுக்கு 64 சிறப்பு மையங்கள் மூலம் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் மூலம் வால்பாறை பகுதியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்று வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...