கோவை கிணத்துக்கடவு பகுதியில் வரும் செப்., 16ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு..!

மின்பாதைக்கு அருகில் உள்ள தாவர கிளைகளை மின்வாரிய பணியாளர்கள் அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி வேண்டுகோள்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் செப்., 16ம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வரும் 16ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுப்புதூர், சிங்காரம்பாளையம், பகவதிபாளையம், சொலவம்பாளையம், குமாரபாளையம், சிக்கலாம்பாளையம், வட புதூர், கல்லாபுரம், வீரப்ப கவுண்டனூர், சொக்கனூர், முத்து கவுண்டனூர், சட்டக் கல்புதூர், குதிரைலாயம் பாளையம், நெ.10.முத்தூர், சங்க ராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக் குளம், தேவராடி பாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம் ஆகிய பகுதியில் மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மின்பாதைக்கு அருகில் உள்ள தாவர கிளைகளை மின்வாரிய பணியாளர்கள் அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...