கோவையில் பல்வேறு துறையில் 3 வருடங்கள் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

கோவை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் குமரேசன், திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்டங்கள் சிறப்பு துணை ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.


கோவை: தமிழக அரசு பல்வேறு துறையில் 3 வருடங்கள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக பணியாற்றி வரும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து வருகிறது.

அதன்படி, கோவை கலால் மேற்பார்வை அலுவலர் குணசேகரன், கோவை தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சிறப்பு பறக்கும் படை துணை ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இளங்கோ, கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, நீலகிரி மாவட்ட தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மேலாளர் சேகர், கோவை மேற்கு மாநகர உதவி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் தனி துணை ஆட்சியர் முருகன், கோவை மாவட்ட ஆய்வு குழு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், கோவை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் குமரேசன், திருப்பூர் சமூக பாதுகாப்பு திட்டங்கள் சிறப்பு துணை ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...