கோவை உக்கடம் பகுதியில் 18 -ஆம் தேதி சனிக்கிழமை மின்தடை.!!

ஹெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.


கோவை: கோவை உக்கடம் சுற்றியுள்ள பகுதியில் வருகிற 18-ம் தேதி சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோவை பந்தயச் சாலை கோவை மின் பகிர்மான வட்டம் மாநகர் மையக் கோட்ட செயற்பொறியாளர் துரைசாமி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாதத்திற்கு ஒருமுறை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் வருகிற சனிக்கிழமை 18 -ம் தேதி காலை 9- மணியிலிருந்து மதியம் 2 -மணிவரை உக்கடம் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மின் தடை ஏற்படக் கூடிய பகுதிகளில் விவரம் வருமாறு:-

உக்கடத்தைச் சுற்றி உள்ள ஹெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், மற்றும் டாக்டர் முனிசாமி நகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான ஸ்டேட் பேங்க் ரோடு, ஆட்சியர் அலுவலகம், ரயில்நிலையம் பகுதிகள், அரசு மருத்துவமனை, லால்பேட்டை, உக்கடம் உள்பட இந்த பகுதிகளில் மின் தடை ஏற்படும் இவ்வாறு பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...