கோவை மாநகராட்சியில் 5-அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.!!

கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் உள்பட 5- அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் உள்பட 5- அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, தலைமை பொறியாளர் லட்சுமணன், அப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். வேறு துறை பணி பொறுப்பு இன்னும் வழங்கப்படவில்லை.

மாநகராட்சி பெண் பொறியாளர் பார்வதி, வேலூர் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு மூத்த பொறியாளரான ஞானவேல், ஈரோடு மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்ட அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உதவிப் பொறியாளர் சரவணகுமார், இவருக்கும் வேறு பொறுப்பு வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரி எஸ்.ரவிச்சந்திரன், மதுரை மாநகராட்சி ஜவஹர்லால் நேரு நகரபுனரமைப்பு திட்ட அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஈரோடு மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்ட அதிகாரி ஆர்.ராமசாமி, பொறியாளர் ஞானவேல் பொறுப்பு வகித்த பதவியை ஏற்கிறார்.

மதுரை மாநகராட்சி ஜவஹர்லால் நேரு நகரப் புனரமைப்பு திட்ட அதிகரி கருப்பாத்தாள், கோவை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரியாகப் பொறுப்பு ஏற்கிறார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...