விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை - சென்னை இடையே தீபாவளி சிறப்பு ரயில்..!

சென்னையில் இருந்து வரும் 13ம் தேதி மற்றும் நவம்பர் 3ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.


கோவை: விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை - சென்னை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

சென்னை - கோவை அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்-06005) சென்னையில் இருந்து வருகின்ற 13ம் தேதி மற்றும் நவம்பா் 3ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இதேபோல, கோவை - சென்னை அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்-06006) வருகின்ற 17ம் தேதி மற்றும் நவம்பா் 7ம் தேதி இரவு 11.30 மணிக்கு, கோவையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

மேலும், இந்த ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...