நீலகிரியில் மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது..!!

ராட்ச பாறை வெடி வைத்து தகர்க்கப்பட்டு, சிறிய கற்கள் ஆக மாற்றப்பட்டு அகற்றப்பட்ட நிலையில், இன்று முதல் மலை ரயில் போக்குவரத்து தொடங்குகிறது.


நீலகிரி: நீலகிரியில் மண்சரிவு காரணமாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 6ம் தேதி இரவு பெய்த பலத்த மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஹல் குரோவ் - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்தது.

இதனால் மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பாறையை அகற்றி தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

ராட்ச பாறை என்பதால் வெடி வைத்து தகர்க்கப்பட்டு, சிறிய கற்கள் ஆக மாற்றப்பட்டு அகற்றப்பட்ட நிலையில், இன்று சனிக்கிழமை முதல் மலை ரயில் போக்குவரத்து தொடங்குகிறது.

இந்த மலை ரயில் மேட்டுப்பாளையம் - ஊட்டி மற்றும் ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...