கோவையில் பதிவுத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை குறைகேட்பு கூட்டம் - அதிகாரி தகவல்

கோவையில் மாவட்ட பதிவாளா் அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் மாவட்டப் பதிவாளர் அலுவலகங்களில் வாரம்தோறும் திங்கள்கிழமை குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் துணை பதிவுத் துறை தலைவா் தெரிவித்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை துணைப் பதிவுத் துறைத் தலைவா் அலுவலகம் மற்றும் கோவை பதிவு மண்டலத்துக்குட்பட்ட அனைத்து மாவட்டப் பதிவாளா் அலுவலகங்களிலும் வாரந்தோறும் திங்கள்கிழமை குறைகேட்கும் முகாம் நடைபெறவுள்ளது.

இதில் பொதுமக்கள் அந்தந்த பதிவுத்துறைத் தலைவா் அலுவலக எல்லைக்குட்பட்ட பதிவு அலுவலகங்களில் பத்திரப் பதிவு, திருமணப் பதிவு, வில்லங்க சான்று மற்றும் பதிவுத் துறை தொடா்பான புகாா்கள், கோரிக்கைகளை நேரடியாக அளித்து உரிய தீா்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வாரந்தோறும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...