மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் தொடர் கனமழை..! கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை நீட்டிப்பு..!!

தவிர்க்க முடியாத காரணத்தால் தடை நீட்டிப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: மேற்கு தொடர்ச்சி மலைகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர தடை நீட்டிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால், கோவை குற்றாலத்தில் நீர் வரத்து அதிகரித்ததால், கடந்த வாரம் முழுவதும் குற்றாலத்திற்குச் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை முதல் நீர் வரத்து குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பியதால் கோவை குற்றலாம் திறக்கவுள்ளதாக வனத்துறை நேற்று அறிவித்தது.



இந்த நிலையில், மீண்டும் நேற்று இரவு பெய்த மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இதனால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வர மீண்டும் தடை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் தடை நீட்டிப்படுவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...